வங்காளதேசத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் முடங்கிய ரெயில் சேவை

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.;

Update:2025-01-29 05:52 IST
வங்காளதேசத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் முடங்கிய ரெயில் சேவை

டாக்கா,

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதன் முடிவில் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கு மத்தியில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே போராட்டக்காரர்களுடன் இடைக்கால அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனவே ரெயில் சேவை முடங்கியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்