3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-21 08:40 GMT

கோப்புப்படம்

சென்னை,

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் இன்று கனமழை

தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, சிவகங்கை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருபத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்., 24ம் தேதி முதல் 27-ம் தேதிவரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்" என்று அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்