தாம்பரத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற காலி சரக்கு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.;

சென்னை,
தாம்பரம்-சானடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச்செல்லும் காலி சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.