நயினார் நாகேந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்;

Update:2025-04-13 10:24 IST

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும் எனது நல்வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்