மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2024-10-15 16:25 GMT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நிலவரம், மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்