கனமழை - மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தபோது மழை காரணமாக தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.

Update: 2024-10-24 15:59 GMT

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போதும் அங்கு கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக 2 விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

அதனால் தூத்துக்குடி மற்றும் திருச்சி விமான நிலையங்களில் தரையிறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்