சென்னை: 14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து - முதியவர் பலி

சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார்.;

Update:2025-04-10 09:18 IST

சென்னை,

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் ஷாம். இவர் காரை வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு தனது 14 வயது மகனிடம் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார்.

அப்போது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் நடந்து சென்ற முதியவர் உள்ளிட்ட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்த போலீசார் இரு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்