டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-06-20 04:08 GMT

சென்னை,

தமிழக அரசு துறைகளில் குரூப் 2,2 ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும்  19-ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி தேர்வு நடைபெறும். மொத்தம் 2,030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க, தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்