தனியார் பஸ் மோதி கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி...சேலத்தில் சோகம்

கர்ப்பிணி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-12 07:11 GMT

சேலம்,

சேலம் - அரூர் நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பஸ் மோதி விபத்துகுள்ளானது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணி, ஒரு பெண், குழந்தை மற்றும் ஆண் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்