3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழப்பு: நிவாரணம் அறிவித்த ஆந்திர முதல்-மந்திரி

மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-08-20 15:46 GMT

அனகாபள்ளி,

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மூன்று குழந்தைகள் இறந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார், மேலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கருணைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்