பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு - பிரதமர் மோடி

சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2025-03-28 21:49 IST
பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு - பிரதமர் மோடி

புதுடெல்லி,

புதுடெல்லியில் நடைபெற்ற டிவி9 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-

இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது.இன்று உலகம் இந்தியாவை உற்றுநோக்கி பார்த்து வருகின்றன. 70 ஆண்டுகளில் உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7 - 8 ஆண்டுகளில் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி?

சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. இதில், 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரு மடங்காக்கிய உலகில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.

ஒரு காலத்தில், அனைத்தும் நாடுகளுடனும் சம தூரத்தை பேணுவது என்ற கொள்கையை பின்பற்றி வந்தது. ஆனால், இன்று இந்தியாவின் கொள்கையானது, அனைவரையும் நெருக்கத்தில் கொண்டு வருவது என மாறி உள்ளது. சர்வதேச கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளில் , உலகின் தெற்கு பகுதியின் வலுவான குரல் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது.உலகம் இந்தியாவின் முயற்சிகள், புதுமைகளை மதிக்கிறது. இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது. இந்தியா உலக நாடுகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் சொந்தமாக தடுப்பூசியை உருவாக்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தோம். 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கினோம். இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இயற்கை பேரழிவுகள் உள்கட்டமைப்பிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இன்று மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் கண்கூடாக கண்டோம். பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) போன்ற ஒரு அமைப்பை உருவாக்க இந்தியா முன்முயற்சி எடுத்து வருகிறது. இது வெறும் ஒரு அமைப்பு மட்டுமல்ல, உலகை இயற்கை பேரழிவுகளுக்குத் தயார்படுத்தும் ஒரு முன் மாதிரி ஆகும்.பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம் தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த பணமானது, திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்