மராட்டிய மாநிலம்: தொழிற்சாலையில் ரசாயன சேமிப்பு கிடங்கில் விபத்து - 3 பேர் பலி

தொழிற்சாலையில் ரசாயன சேமிப்பு கிடங்கில் விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Update: 2024-09-12 16:00 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலையில் அமைந்துள்ள ரோஹா டவுன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காலை 11.15 மணியளவில் எதிர்பாராத விதமாக மெத்தனால் ரசாயனம் சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு கிடங்கு வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்