டி.சி.எஸ் வருவாய் உயர்வு ; ஐடி பங்குகளுக்கு மவுசு

ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வை சந்தித்தன.

Update: 2024-07-12 08:24 GMT

மும்பை

டி.சி.எஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து ஐ.டி பங்குகள் இன்று அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய சாதனை அளவை எட்டின.30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 996.17 புள்ளிகள் உயர்ந்து 80,893.51 என்ற வரலாற்று அளவை எட்டியது. என் எஸ்சி நிப்டி 276.25 புள்ளிகள் உயர்ந்து 24,592.20 என்ற புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜூன் காலாண்டில் 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.12,040 கோடியை நிகர லாபத்தை பெற்றுள்ளது. இதன்காரணமாக இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை அதிக லாபத்துடன் கைமாறின.

அதே நேரம் மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை பின்னடைவை சந்தித்தன. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வை சந்தித்தன. சியோல் மற்றும் டோக்கியோ பங்குசந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்