வெயில் தாக்கம்: ஒடிசாவில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்
வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

புவனேஸ்வர்,
நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள போலாங்கிர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.
இந்தநிலையில், வெயில் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.