ஆந்திர பிரதேசத்தின் புதிய டி.ஜி.பி. ஆக ஹரிஷ் குமார் குப்தா நியமனம்
ஆந்திர பிரதேசத்தின் புதிய டி.ஜி.பி ஆக ஹரிஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டார்.;

அமராவதி,
ஆந்திர பிரதேச அரசு புதன்கிழமை ஹரிஷ் குமார் குப்தாவை முழு கூடுதல் பொறுப்பின் கீழ் காவல்துறை இயக்குநராக (டி.ஜி.பி) அம்மாநில அரசு நியமித்தது.
1992 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான குப்தா, நாளை. திருமலை ராவ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவருக்குப் பதிலாக டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார்.
பிப்ரவரி 1 முதல் ஒரு வருட காலத்திற்கு ஆந்திர பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் ராவ் மீண்டும் பணியமர்த்தப்பட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விஜிலென்ஸ் மற்றும் அமலாக்க இயக்குநர் ஜெனரல் மற்றும் அரசு முன்னாள் அதிகாரி முதன்மைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா மறு உத்தரவு வரும் வரை டி.ஜி.பி (காவல் படைத் தலைவர்) பதவியின் முழு கூடுதல் பொறுப்பில் வைக்கப்படுகிறார்," என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.