தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.;

Update:2025-03-14 21:42 IST
தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு வருகிற மே மாதம் 23-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையிலம் நடைபெறுகிறது.

இதற்கான, தனித் தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. தனித் தேர்வர்கள், தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள், வருகிற 25, 26 ஆகிய தேதிகளில், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 செலுத்தி தட்கள் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்