சென்னை ஐகோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை ஐகோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-01 11:47 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை ஐகோர்ட்டு வளாகம், சட்ட அலுவலர்கள் கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்கு 8-ம் பகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்ஸிம் அல்லாதவர்) மற்றும் (முன்னுரிமை அல்லாதவர்) [BC (other than BC Muslim) and (Non - Priority)] விண்ணப்பிக்கலாம்.

01. 07. 2024 - அன்றுள்ளவாறு 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பள விகிதம் ஊதிய நிலை – 1, ரூ. 15,700/- ஆகும். இதற்கான விண்ணப்பத்தினை, "அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் , சட்ட அலுவலகர்கள் கட்டிடம் (3 வது தளம்), சென்னை – 600 104" என்ற முகவரிக்கு 25. 10. 2024 மாலை 5. 45 மணிக்குள் வந்து சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் "அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்" என்று எழுதப்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், கல்வித்தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப உறையினுள் முகவரியுடன் கூடிய ஒரு "Self envelope cover affixed with Rs. 50/- Postal Stamp" – வைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்