சதுரகிரியில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.

Update: 2024-10-15 22:16 GMT

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்மழையால் காட்டாறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்