சீதாராம் யெச்சூரி மறைவு- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: -சீதாராம் யெச்சூரியின் அளப்பரிய பணிகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும். அவரது மறைவு வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. தோழருக்கு செவ்வணக்கம். அவசர நிலை காலத்தில் மாணவர் பருவத்திலேயே துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் இருந்தே நீதிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய பயமறியா தலைவராக இருந்தவர் சீதாராம் யெச்சூரி.

Update: 2024-09-12 12:22 GMT

Linked news