விளையாட்டு கிராமத்தில் ஓய்வெடுக்கும் வினேஷ் போகத்

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு பிறகு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது:-

எங்களுக்கு நேரம் குறைவாகவே உள்ளது. எனினும், எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

உடல் எடையை குறைப்பதற்காக வினேஷே போகத் இரவு முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டதால், நீர்ச்சத்து சற்று குறைந்துவிட்டது. இப்போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் விளையாட்டு கிராமத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அதிக எடை காரணமாக, பெண்கள் மல்யுத்தத்தில் முதல் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது நாட்டிற்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம். நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போட்டிகளுக்கு சிறப்பாக தயாராகி உள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். 2 அல்லது 3 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2024-08-07 11:33 GMT

Linked news