ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகளை... ... ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்

ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகளை மறுசீரமைப்பு பணிகள் தற்போது இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக ரெயில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். 

Update: 2023-06-03 18:23 GMT

Linked news