மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி முதல் மந்திரி நவீன் பட்நாயக்

உள்ளூர் மக்கள் உதவியால் விபத்து நடந்த இடத்தில் முழுமையாக மீட்புபணிகள் முடிவடைந்து உள்ளன.

ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று நிலத்தடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.மேலும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைந் அடத்தினார்.

பாலாசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளையும் பட்நாயக் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிறுபர்களுக்கு பேட்டி அளித்த நவீன் பட்நாயக் இது மிகவும் சோகமான ரெயில் விபத்து. இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் குழுக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ரெயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

Update: 2023-06-03 06:02 GMT

Linked news