ஒடிசா ரெயில் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு...!

ஒடிசா ரெயில் விபத்து குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னதாக ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி டுவீட் செய்து இருந்தார்.

Update: 2023-06-03 05:49 GMT

Linked news