ஆதித்யா விண்கலம் எல்-1 முனை பகுதியை சென்றடைவது தொழில் நுட்ப ரீதியாக மிக சவாலானது

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஆதித்யா விண்கலம் எல்-1 முனை பகுதியை சென்றடைவது என்பது தொழில் நுட்ப ரீதியாக மிக சவாலானது.

அதன்பின்னர், விண்கலம் அதற்கான சுற்று வட்டப்பாதையில் செல்ல வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக மிக துல்லிய முனை பகுதிகள் தேவையாக உள்ளன.

இது அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் அளிக்க கூடியது. ஏனெனில், 7 உபகரணங்கள் சூரியன் மற்றும் அதனை சுற்றி என்ன நடக்கிறது என்றும், அதன் ஆற்றல் மற்றும் பிற காரண காரியங்கள் உள்ளிட்டவற்றை பற்றி புரிந்து கொள்ளும் பணிகளை மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.

Update: 2023-09-02 05:13 GMT

Linked news