திமுக பவள விழாவில் கலந்து கொள்வதில்... ... தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக பவள விழாவில் கலந்து கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்- செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி

சென்னை,

ஜாமீனில் வெளியே வந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக பவள விழாவில் கலந்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத்தலைவர் கலைஞர் கட்டிக்காத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .

புரட்சிக்கரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-09-28 13:16 GMT

Linked news