"2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார்" - அமித்ஷா

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தில் உள்துறை மந்திரி அமிஷா பேசியதாவது:-

இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார். உலகளவில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திரமோடி. ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்த 13 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை, ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வருவது மோடி அரசு தான்.

வட கிழக்கு மாநிலங்களுக்கு முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை; அங்கு அனைத்து தரப்பு வளர்ச்சியையும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார் என்றார்.

Update: 2023-08-09 13:03 GMT

Linked news