ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளி

ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

ஒற்றுமை நடைபயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களின் குரல்களையும் கேட்டேன்.

நான் இன்று பேச தொடங்கியவுடன் வெறுப்புடன் சிலர் பேசத் தொடங்கினார்கள்;

இந்த வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஒற்றுமை யாத்திரையின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்;உண்மையான இந்தியாவை அந்த பயணத்தின் வழியாக நான் பார்த்தேன்.

"நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை.

அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை; பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார்.

தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள் என ராகுல்காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-09 07:28 GMT

Linked news