மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்... ... சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாட்டின் சித்தாந்தங்களுக்கு இடையே பாலம் கட்ட பாடுபட்ட நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் சீதாராம் யெச்சூரியும் ஒருவர். சீதாராம் யெச்சூரி தனது வாழ்நாள் முழுவதும் போராடி, தனது வாழ்நாள் முழுவதும் தனது சித்தாந்தத்தை பரப்புவதற்காக அர்ப்பணித்தவர். மக்களிடம் சீதாராம் யெச்சூரி என்றென்றும் நினைவுகூரப்படுவார், அரசியலில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்ட அந்தத் தலைமுறைத் தலைவர்களின் தலைவர் அவர்தான்” என்று அவர் கூறினார். 

Update: 2024-09-14 09:47 GMT

Linked news