மத்திய அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் - மக்களவையில் அமித்ஷா பேச்சு

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் அமித்ஷா பதில் அளித்து வருகிறார்.

மத்திய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

Update: 2023-08-09 11:52 GMT

Linked news