அமைச்சர் பொன்முடிக்கு நாளை தண்டனை விவரம் அறிவிப்பு என தகவல்

Update: 2023-12-20 16:06 GMT

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 2-வது வழக்காக பட்டியிலப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிலோ காணொலி வாயிலாகவோ ஆஜராகும்பட்சத்தில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்