உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மத்திய அரசு தகவல்
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவக்கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு தரப்படும். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.