விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் சுமித் நாகல் இணை தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-03 15:18 GMT

Image Courtesy: AFP 

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல் - செர்பியாவின் டுசான் லாஜோவிக் இணை, ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெஸ் - ஜௌம் மூனார் இணையை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெட்ரோ மார்டினெஸ் - ஜௌம் மூனார் இணை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகல் - செர்பியாவின் டுசான் லாஜோவிக் இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்