ஐ.எஸ்.எல்.கால்பந்து; ஜாம்ஷெட்பூர், மோகன் பகான் அணிகள் வெற்றி

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-10-06 00:50 GMT

Image Courtesy: @IndSuperLeague

ஜாம்ஷெட்பூர்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் - முகமதின் எஸ்.சி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரில் அடுத்த 10 நாட்கள் ஓய்வு நாளாகும். தொடர்ந்து வரும் 17ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி - சென்னையின் எப்.சி அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்