ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி

லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 27ம் தேதி நிறைவு பெற்றன.

Update: 2024-06-30 09:52 GMT

Image :UEFA EURO 2024

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.அதன்படி தற்போது இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 27ம் தேதி நிறைவு பெற்றன. தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து ரெமோ ப்ரூலர் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 முன்னிலை பெற்றது.தொடர்ந்து ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரூபன் வார்க்ஸ் கோல் அடித்தார். இத்தாலி வீரர்கள் கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 2-0 என சுவிட்சர்லாந்து வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

Tags:    

மேலும் செய்திகள்