துரந்த் கோப்பை கால்பந்து: மோகன் பகானை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன்

துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் மோகன் பகான் அணியை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-09-01 04:28 GMT

image courtesy: twitter/@thedurandcup

கொல்கத்தா,

துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. போட்டிகள் கொல்கத்தா, கோக்ராஜ்ஹர், ஷில்லாங், ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் நடந்தன.

மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மோகன் பகான் – நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என டிராவில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கபட்டது. அதில் நார்த்ஈஸ்ட் 4-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்