இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தொடர் எப்போது..?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் நீண்ட காலம் ஓய்வின்றி விளையாடி வருகின்றனர்.

Update: 2024-08-10 03:24 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடர், உடனடியாக டி20 உலகக்கோப்பை தொடர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் அதன்பின்னர் இலங்கை அணிக்கெதிரான தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி இந்திய வீரர்கள் பங்கேற்றதால் அவர்களுக்கு ஒரு நீண்ட ஓய்வினை வழங்கவே இந்திய நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

அதன்படி இலங்கை தொடருக்கு பின் ஏறக்குறைய 40 நாட்கள் இந்திய வீரர்கள் ஓய்வெடுக்க உள்ளனர். இதனையடுத்து இந்திய அணி அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ள வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில்தான் களமிறங்க உள்ளது.

வீரர்கள் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்