இரானி கோப்பை 2024: ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிப்பு.. கெய்க்வாட் கேப்டன்

இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

Update: 2024-09-24 12:56 GMT

மும்பை,

இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023 - 24 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.

இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆப் இந்தியா அணி :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.

இதில் துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். அந்த போட்டியில் களமிறங்காத பட்சத்தில் அவர்கள் அணியில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்