ஐ.பி.எல். 2024 - ஜெர்சியை அறிமுகப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது.

Update: 2024-03-07 17:00 GMT

 ஐதராபாத்,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அந்த அணி அறிமுகம் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்