அவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறேன் - வங்காளதேச வீரர்

இந்தியா-வங்காளதேசம் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது.

Update: 2024-10-06 05:14 GMT

Image Courtesy: @BCBtigers

குவாலியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பும்ரா, சிராஜ், பண்ட், கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த வங்காளதேச அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தங்கள் அணியின் ஜாம்பவான் ஷகிப் அல் ஹசனை வங்கதேச அணி மிஸ் செய்யும் என்று அந்நாட்டின் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

டி20 என்பது ரன்களை பொறுத்ததாகும். அதில் ஒவ்வொரு அணியும் பெரிய ரன்கள் குவிக்க விரும்புவார்கள். இந்த மைதானத்தில் நீண்ட காலமாக எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இது புதிய மைதானம். எனவே இங்குள்ள சூழ்நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பயிற்சி ஆடுகளத்தை பார்க்கும் போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிகிறது.

இது போன்ற சூழ்நிலையில் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் அழுத்தம் இருக்கும். ஆனால் அதைப்பற்றி சிந்தித்தால் சிறப்பாக செயல்பட முடியாது. எப்படி அசத்த முடியும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

ஷாகிப் இல்லை. அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் அனைவரும் ஒருநாள் சென்றாக வேண்டும். இருப்பினும் அவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறேன் என தவ்ஹீத் ஹ்ரிடாய் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்