வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்

வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி சென்னை வருகிறார்கள்.

Update: 2024-09-12 18:58 GMT

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். நாளை முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

Tags:    

மேலும் செய்திகள்