வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து இளம் வீரர் விடுவிப்பு.. வெளியான தகவல்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

Update: 2024-09-24 12:20 GMT

கோப்புப்படம்

மும்பை,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியிலிருந்து இளம் வீரரான சர்பராஸ் கான் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியில் அறிமுகம் ஆன அவர் சிறப்பாக விளையாடினார். அதன் காரணமாக வங்காளதேச டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் முன்னணி வீரர்கள் இந்த தொடருக்கு திரும்பியதால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்