நீடாமங்கலம், செப்.28-
நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் ஏலவார் குழலியம்மன், சுக்கிரவார அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.