அடுத்த 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் காணாமல் போய்விடும்" அதிர்ச்சியளிக்கும் ஆய்வாளர்கள்..!

அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-08-20 12:14 GMT

ஜெர்மனி,

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன...

அதிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள 3 ஆயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான "ஷ்னீஃபெர்னர்", சமீப ஆண்டுகளாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அந்த பனிப்பாறை தனது பெரும்பான்மையான பகுதியை இழந்துள்ளது. இந்த ஆண்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்தியுள்ளன.

பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது ஆல்பைன் பனிப்பாறைகள் உருகுவதை கொஞ்சம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

 

Tags:    

மேலும் செய்திகள்