இந்தோனேசியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

Update: 2024-08-25 10:17 GMT

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 

இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள், மலைப்பகுதிகள் அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கின்றனர். இதனால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்