வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் 3 பேர் பலி

வியட்நாமில் வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

Update: 2024-06-11 22:30 GMT

ஹனோய்,

வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்