பூச்சி கடித்து பெண் சாவு

பூச்சி கடித்து பெண் உயிரிழந்தார்.

Update: 2023-10-09 17:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி மகாலட்சுமி(வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெரியண்ணன் நேற்று மாலை அதே பகுதியில் தனது வயலில் மகாலட்சுமியுடன் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மகாலட்சுமியை அடையாளம் தெரியாத பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை பெரியண்ணன் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்