பனை மரத்தில் விஷ வண்டு கூட்டை அழிக்க வேண்டும்

கீரங்குடியில் பனை மரத்தில் விஷ வண்டு கூட்டை அழிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-08 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் மயானம் அருகே சாலையோரத்தில் உள்ள பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி உள்ளன. இவை அந்த வழியாக செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இந்த பனை மரத்தில் உள்ள விஷ வண்டு கூட்டை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்