ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-05 02:23 GMT

தர்மபுரி,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில், நீர் வரத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து 22-வது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்