போடி கண்மாயில் ஆண் பிணம்

போடியில் கண்மாயில் ஆண் பிணம் மிதந்தது.

Update: 2023-10-25 21:30 GMT

போடியில், தேனி சாலையில் பங்காருசாமி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் கண்மாயில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்மாயில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கண்மாயில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்