சோழவரம் அருகே வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

சோழவரம் அருகே வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-09 14:45 GMT

பொன்னேரி அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது32). சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோழவரம் அருகே உள்ள செம்பிலிவரம் செங்காளம்மன் கோவில் பகுதியில் காரனோடை சாலையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரக்கு வாகனத்தின் மீது மோதினர்.

பின்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கோபாலகிருஷ்ணனை வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து அங்கு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த நிலையில் சோழவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), டில்லிபாபு (22) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்